திருப்பதி அருகே ஆற்றில் மூழ்கி ஏழு இளைஞர்கள் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி கொரலகுண்டா பகுதியை சேர்ந்த வெங்கடசிவா என்பவரின் தந்தை சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து போனார். இவரின் 11 வது நாள் துக்க நிகழ்ச்சி சந்திரசேகரின் சொந்த ஊரான கடப்பா மாவட்டம் திகுவபேட்டை கிராமத்தில் நடந்தது. இதில் வெங்கடசிவா மற்றும் திருப்பதியைச் சேர்ந்த அவரது நண்பர்கள் உள்பட 11 பேர் பங்கேற்றனர். பின்னர் சித்தவட்டம் பகுதியில் உள்ள பென்னா நதியில் கரை புரண்டு ஓடும் தண்ணீரைப் பார்த்த இளைஞர்கள் தண்ணீரில் செல்பி எடுத்தனர். பின்னர் 8 பேரும் ஆற்றில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது நதியில் திடீரென தண்ணீரின் வேகம் அதிகரிக்கவே குளித்துக் கொண்டிருந்த 8 பெரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் வெங்கடசிவா மட்டும் நீந்தி கரை சேர்ந்தார். சோமசேகர், யஷ்வந்த், தருண், ஜெகதீஷ், ராஜேஷ், சதீஷ் மற்றும் ஷான் ஆகிய 7 பெறும் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு நீச்சல் வீரர்கள் துணையுடன் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களில் தற்போது வரை மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

More News >>