கல்லூரியில் நடிகரை ரேகிங் செய்த சூர்யா? யார் அந்த நடிகர்?

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரிக்க, ராஜ சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், மற்றும் ஆர்பி பிலிம்ஸ் எஸ்.ஆர்.ரமேஷ் பாபு, இணை தயாரிப்பு செய்கின்றனர். சரோவ் சண்முகம் இயக்குகிறார்.

இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. சிவ குமார், சூர்யா, கார்த்தி, அருண் விஜய், ஆர்னவ் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர். சூர்யாவும், அருண் விஜய்யும் ஒன்றாக கல்லூரியில் படித்தவர்கள். சூர்யா சீனியர். அருண்விஜய் ஜுனியர். அருண் விஜய் கல்லூரியில் சேர்ந்தபோது அவரை சூர்யா ரேகிங் செய்ய முயன்றார். இது குறித்து சூர்யாவே பகிர்ந்துக்கொண்டார்.

அதுபற்றிய வீடியோவில் சூர்யா பேசியதாவது:கல்லூரியில் நானும் அருண் விஜய்யும் ஒன்றாக படித்தவர்கள். நான் சீனியர். அருண் விஜய்யை அவரது அப்பா விஜயகுமார் கல்லூரிக்கு அழைத்து வந்து சேர்த்துவிட்டுச் சென்றார். விஜயகுமார் பையனா ரேகிங் செய்துவிடுவோம் என்று அவரை அழைத்து, நீ ஏதோ 360 டிகிரி பல்டி அடிக்கிறயாமே எங்கே அடித்துக்காட்டு என்று கேட்டேன். அவர் பேசாமல் அமைதியாக இருந்தார். டேய் நான் சீனியர், கேட்டால் செய்யணும் என்றேன் அப்போதும் அவர் செய்யவில்லை. தமிழ் நடிகர்களில் அருண் விஜய் ரொம்பவும் ஃபிட்டான நடிகர். அந்தளவுக்குத் தனது உடற்கட்டை பராமரிப்பார் என்றார்.சூர்யா தற்போது வெற்றி மாறன் இயக்கும் வாடி வாசல், பாண்டி ராஜ் இயக்கும் படம், கவுதம் மேனன் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்க உள்ளார். மேலும் தமிழில் தான் நடித்துத் தயாரித்த சூரரைப்போற்று போற்று படத்தினை இந்தியில் தயாரிக்க உள்ளார்.

அருண் விஜய்யை பொருந்த வரை அக்னிசிறகுகள், பாக்ஸர், சினம் ஆகிய படங்களில் நடிக்கிறார். இது தவிர ஹரி இயக்கும் படத்தில் முதன்முறையாகக் கைகோர்க்கிறார். முன்னதாக சூர்யா நடித்த சிங்கம் படத்தை 3 பாகமாக இயக்கினார் ஹரி. அடுத்து அருவா என்ற படத் தை இயக்கவிருந்தார். ஆனால் அந்த படம் டிராப் ஆனது. சூர்யா சூரரைப்போற்று படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்த போது அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஹரியும் சூர்யாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். நம்மை வளர்த்த தியேட்டரை மறந்து விட்டு ஒடிடியில் படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறினார். இதையடுத்து சூர்யா-ஹரிக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.

More News >>