கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி

கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து காட்டுக்குள் வீசி நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மதனப்பேட்டையை சேர்ந்தவர் ராஜூ. இவர் மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அங்குள்ள காய்கறி மார்க்கெட் அருகே டிபன் கடை நடத்திவந்தார்.

இதனிடையில், கவிதாவுக்கு தூரத்து உறவினரான சுமன் என்பவர் அடிக்கடி ராஜூவின் வீட்டுக்கு அடிக்கடி வந்து போயுள்ளார். இதனால் கவிதாவும், சுமனும் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த விஷயம் கணவர் ராஜூக்கு தெரிய வர, கவிதாவை ராஜூ கண்டித்துள்ளார்.

ஆனாலும், கவிதா சுமன் உடனான தொடர்பை விடவில்லை. இதனால், மனமுடைந்த ராஜூ தினமும் குடித்துவிட்டு கவிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும், சுமன் உடனான தொடர்பை கவிதை கைவிடாததால், எரிச்சலடைந்த ராஜூ கவிதாவை எச்சரித்துள்ளார்.

எனவே, கவிதா முதலில் ராஜூவை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இந்த திட்டத்திதற்கு சுமனும், மற்றொரு உறவினரும் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம் போல போதையில் வந்த ராஜூவை, சுமனும், உறவினரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளனர்.

பின்னர் கவிதா அவரது கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பிறகு, சுமனும் அவர் உறவினரும் ராஜூவின் உடலை அவர் பைக்கிலேயே வைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் வீசிவிட்டு சென்றனர். பிறகு ஒன்றும் தெரியாததுபோல் கவிதா தனது கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் கவிதாவை கண்காணிக்கத் தொடங்கினர். கவிதாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததால், உண்மையை ஒப்புக்கொண்டார் கவிதா. பிறகு அவரது கள்ளக் காதலன் சுமன், உறவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>