`சரத் பவார் பிரதமரானால் மகிழ்ச்சி!- நானா படேகர் கருத்து

பாலிவுட்டின் பிரபல நடிகரான நானா படேகர், `சரத் பவார் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன்’ என்று கூறி தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நானா படேகர் நன்றாக நடிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் நடக்கும் அரசியல் சூழல்கள் குறித்தும் வெளிப்படையாக பேசக்கூடியவர். இதற்காகவே அவர் பேசும் கூட்டங்களில் ஊடக கவனம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் அவர், `தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பிரதமரானால் மகிழ்ச்சி அடைவேன்’ என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் குறித்து அவர் மேலும், `1996-ம் ஆண்டு கர்நாடகாவின் முதல்வராக இருந்த தேவ கௌடா பிரதமரானார்.

அப்போது சரத் பவார் மயிரிழையில் பிரதமராகும் வாய்ப்பை இழந்தார். அப்போதே பவார்தான் பிரதமராக பதவியேற்றிருக்க வேண்டும். தேவ கௌடாவால் பிரதமராக முடியுமென்றால், ஏன் சரத் பவாரால் பிரதமராக முடியாது? அவர் பிரதமரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்’ என்று கருத்து கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>