2500 கொள்ளைப் பணம் என்றால் 6,000 எந்த பணம்? பாஜகவுக்கு அமைச்சர் சண்முகம் கேள்வி

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொள்ளைப் பணம் என்றால் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 6,000 ரூபாய் எந்த பணம் என அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார்.விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது : அதிமுக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கவர்னரிடம் வழங்கியுள்ளது. திமுக கூறி உள்ள குற்றச்சாட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும்போது ஏன் கவர்னரிடம் வழங்கினார்கள் என்று தெரியவில்லை. இதனை சட்டப்படி எதிர்கொள்ள இருக்கிறோம்.

தமிழக அரசு பொங்கல் பணம் 2500 ரூபாய் அறிவித்துள்ளதை, கொள்ளையடித்த பணம் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் மத்திய அரசு கிசான் திட்டம் மூலம் ரூபாய் 6000 வழங்கியது எந்த பணம்? என்று அவர் விளக்குவாரா. என்றார்.

More News >>