மயானத்தில் மர்ம கும்பலால் ரவுடி வெட்டி கொலை தந்தை சமாதியில் பிணத்தை வைத்து எரித்த கொடூரம்..

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்து அவரது தந்தை சமாதியிலே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலயூர் கிராமத்தை சேர்ந்தவர் சதிஷ்பாபு. இவருக்கு வயது 40. இவர் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற தவறான வேலைகளில் ஈடுபடுவதே இவரது தொழிலாகும். இவரது தந்தை ரிட்டையர் போலீஸ். இவர் மிகவும் நேர்மையானவர். இவரது மகன் தவறு செய்பவன் என்று தெரிந்தும் 'என் மகனை போலீஸ் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம்' என்று அவரது கைப்பட கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.

இவரது தந்தை சில நாட்களுக்கு முன் தவறிவிட்டார். இந்நிலையில் நேற்று இவர் அவரது தந்தையின் சமாதியை பார்க்க காரில் பயணித்துள்ளார். அப்பொழுது மர்ம கும்பலால் வழிமறைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் கால், கை, கழுத்து ஆகியவை வெட்டி அவரது தந்தை சமாதியின் மேல் வைத்து கொடூரமாக எரித்துள்ளனர். இதைப்பற்றி போலீஸ்க்கு தகவல் கிடைத்ததை குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சுரேஷ்க்கு மொத்தம் மூன்று மனைவிகள்.

இவர் தற்பொழுது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். இவர் சில நாட்களாக கொலை, கொள்ளை போன்றவற்றை கைவிட்டு திருந்தி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமான நிலத்தை விற்று கையில் ஒரு கோடி ரூபாய் வைத்துள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டாவது மனைவி கொலை செய்த கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மற்றும் சுரேஷின் எதிரி வட்டாரத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

More News >>