தனிமைப்படுத்தலில் நயன்தாரா.. விக்கேஷ்சிவனுடன் திரும்பி வந்தார்

ரஜினிகாந்த், குஷ்பு மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் அண்ணாத்த. கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஷூட்டிங் நடத்துவதற்கு 2 மாதத்துக்கு முன்பே அரசு அனுமதி அளித்தும் கொரோனா பரவல் காரணமாக ரஜினிகாந்த் ஷூட்டிங்கில் பங்கேற்கத் தயக்கம் காட்டி வந்தார். இதற்கிடையில் அவர் தனது கட்சி பற்றி அறிவிப்பு வெளியிட்டார். டிசம்பர் 31ம் தேதி புதிய கட்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து டிசம்பர் 12ம் தேதி அவர் தனது 70வது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். அவருக்குப் பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து மறுநாள் ஐதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்க தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். நடிகை நயன்தாராவும் தனிவிமானத்தில் புறப்பட்டுச் சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 40 சதவீத படப்பிடிப்பு பாக்கி இருந்ததால ரஜினிகாந்த், நயன்தாரா முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தனர்.

சுமார் 14 மணி நேரம் ரஜினிகாந்த் தினமும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் படப் பிடிப்பு ரத்து செய்யப் பட்டது. ரஜினிகாந்த் தன்னை ஐதராபாத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். நேற்று அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவரது உடல் நிலை சீராக உள்ளது.இதற்கிடையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நயன்தாரா காதலர் விக்னேஷ் சிவனுடன் ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். இருவரும் ஐதராபாத் விமான நிலையத்தில் கைகோர்த்தபடி நடந்து வந்த படங்கள் நெட்டில் வலம் வருகிறது.

அண்ணாத்த படப் பிடிப்பில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் நயன்தாராவும் சென்னை வந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவன், தான் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படப் பிடிப்புக்காக ஐதராபாத்தில் ஷூட்டிங் நடத்தி வந்தார். அதில் ஹீரோ விஜய்சேதுபதி, மற்றொரு ஹீரோயின் சமந்தா கலந்துகொண்டு நடித்து வந்தனர்.

More News >>