அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை : பொன். ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி நீடிக்கிறது அதில் எந்த குழப்பமும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கடலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிதம்பரத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கிறது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு கட்சியினரும் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக சில விஷயங்களை பேசுகிறார்கள். இதை குற்றம் என்று சொல்ல முடியாது. அதிமுக அமைச்சர்களும் அதுபோல் பேசியிருக்கலாம். அதிமுக ஒரு தனி கட்சி.

பாஜக ஒரு தனிக்கட்சி. அதில் குழப்பம் உண்டாக்குவது தேவையில்லை. திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் திமுகவினர் கிராமங்களுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். பல இடங்களில் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டும் கோவிலுக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அனுமதி இல்லை . அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் அனுமதி அளிக்கப்படுகிறது. கோயில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. ஆனாலும் அனுமதிக்கப்படுவது இல்லை. இது எந்த விதத்தில் நியாயம். இது சரியான அணுகுமுறை அல்ல. அதிமுகவினர் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

அதை ஏற்றுக் கொள்வது குறித்து எங்களது கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும். தமிழகத்தில் பல திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது. அதனால் வீடு கட்டும் இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அப்படி வைக்காவிட்டால் இவர்கள் நன்றி கெட்டவர்கள் என்றார். கமலஹாசன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த பொன் ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துவாரே அவர்தானே என கேட்டுவிட்டு, தான் ஒரு முழு நேர அரசியல்வாதி. பிரஸ் மீட் கொடுக்கும்போது மட்டும் அரசியல்வாதியாக இருந்து விட்டு அதன் பிறகு வியாபாரியாக மாறும் அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்றார்.

More News >>