ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர்!

ஐபிஎல் தொடரின் பத்தாவது சீசனில் இருந்து பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல்-ன் பத்தாவது சீசன் கடந்த 7-ம் தேதி தொடங்கி வெகு விமர்சையாக நடந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காவிரி விவகாரத்தால், மாநில அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அதனால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்த கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக, இந்த சீசன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

அவரை மும்பை இந்தியன்ஸ் அணி, 5.4 கோடி ரூபாய்க்கு ஏலத்துக்கு எடுத்திருந்தது. இன்னும் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடாத நிலையில் சிகிச்சைக்காக சொந்த நாடு திரும்புகிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>