ஐபிஎல் கமென்டரி கொடுக்கமாட்டேன்- வெளியேறிய ஆர்.ஜே.பாலாஜி

ஐபிஎல் வர்ணனையாளராக இன்று நான் பணியாற்ற மாட்டேன் என ஆர்ஜே பாலாஜி வெளியேறியுள்ளார்.

இன்று சென்னையில் இரவு எட்டு மணி அளவில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடும் போட்டிகள் நடக்கும் என ஐபிஎல் அட்டவணை கூறுகிறது. ஆனால், இன்று சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடக்கவிடமாட்டோம் என சென்னை அண்ணா சாலையிலிருந்து சேப்பாக்கம் மைதானம் வரையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று ஐபிஎல் போட்டியின் போது தமிழ் வர்ணனையாளராக செயல்படும் ஆர்ஜே பாலாஜி தான் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று பணியாற்றமாட்டேன் எனக் கூறியுள்ளார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனது தரப்பில் செய்ய வேண்டியதை நான் செய்துவிட்டேன். ஆனால், நாட்டின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் பெற தமிழகத்தின் 40 எம்.பி-களும், 234 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால் போதும். நாட்டின் கவனத்தைப் பெற்றுவிடலாம்" என ஒரு வீடியோவையே தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

More News >>