புதிய வகை கொரோனா பரவல் : திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை

பிரிட்டனிலிருந்து புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருத்தணி கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை திருத்தணி முருகன் கோயில், சிறுவாபுரி பாலமுருகன் கோயில், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், பழவேற்காடு கடற்கரை, பூண்டி நீர்த்தேக்கம் ஆகிய இடங்களுக்கு மக்கள் வர தடை விதிக்கப்படுகிறது.

More News >>