புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து ஊர் திரும்பும் நட்சத்திரங்கள்

2021ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பல நட்சத்திரங்கள் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு, பிற மாநிலங்களுக்கு பறந்தனர்.நடிகை ராஷ்மிகா, நடிகர் விஜய தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பலர் கோவா சென்றனர். புத்தாண்டைத் தடபுடலாகக் கொண்டாடித் தீர்த்தனர். தற்போது கூட்டுக்குத் திரும்பும் பறவை போல் ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய தேவரகொண்டா அவரது சகோதரர் ஆனந்த் ஆகியோர் கோவாவில் புத்தாண்டை அனுபவித்து விட்டு ஐதராபாத் திரும்பினர்.

விஜய் தேவரகொண்டா விரைவில் தனது வரவிருக்கும் படமான ஃபைட்டரின் படப் பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இப்படத்துக்காக விஜய் தேவர கொண்டா ஜிம் மாஸ்டரிடம் உடலைக் கட்டுக்கோப்பாக்கப் பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, ஃபைட்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டியிருந்தது. அதன்பிறகு இந்த ஜனவரியில் விஜய தேவரகொண்டா ஃபைட்டரின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் தயாரிப்பாளர்களால் வெளியிடப்படவில்லை.பூரி ஜகந்நாத் இயக்கியுள்ள ஃபைட்டர் ஒரு குத்துச் சண்டை அடிப்படையிலான ஸ்கிரிப்ட் ஆகும், இது விஜய தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தைப் பூரி ஜகநாத், சார்ம் கவுர் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

More News >>