கேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடியை தானமாக கொடுத்த பிரபல தம்பதி

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலகின் பிரபல தம்பதியினர் தலைமுடியை தானமாக கொடுத்துள்ளனர்.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை செய்யப்படுகிறது. இதன் கதிர்வீச்சு தாக்கத்தால் தலைமுடி உதிர்வது இயல்பு. இதனால், பெரும்பாலான நோயாளிகளுக்கு மொட்டை அடித்துவிடுவார்கள்.

தலைமுடி இல்லாமல் கேன்சர் நோமாளிகள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு விக் செய்வதற்காக பலர் தங்களது தலை முடியை தானம் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் அவர்களது தலைமுடியை தானம் செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறுகையில், “தலைமுடியை கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளேன். எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக் ஆக மாறுவதில் எனக்கு மகிழ்ச்சி” என குறிபிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>