திரெளபதி பட சர்ச்சை இயக்குனர் புதிய படம் தொடக்கம்..

கடந்த ஆண்டு ரிஷி ரிச்சர்ட் நடிப்பில் திரெளபதி என்ற படம் திரைக்கு வந்தது. இப்படத்தை மோகன் ஜி இயக்கி இருந்தார். இப்படம் ஆணவகொலைக்கு ஆதராவாக இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதே சமயம் பாஜவினர் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜாதியை மையமாக வைத்து திரெளபதி படம் இயக்கி உள்ளதாக எதிர்ப்பும் ஆதரவும் வெளிப்பட்டது. அப்படத்தின் போஸ்டரில், பாரதியாரின் கவிதையில் ஒருவரி மாற்றப்பட்டு, சாதிகள் உள்ளதடி பாப்பா… எனக் குறிப்பிட்டிருந்ததும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. அப்போது இதுபற்றி கருத்து சொன்ன பட இயக்குனர் மோகன் ஜி,”யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இங்கே ஜாதி என்பது ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

ஆகவே, ஜாதியை வைத்து உயர்வு, தாழ்வு கொள்ளாமல் இருப்பதே முக்கியம். ஆகவே தான், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற பாரதி வரியை அப்படியே சேர்த்திருக்கிறோம்,” என்றார். சுமார் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கும் புதிய படம் தொடங்குகிறார். அப்படத்துக்கு " ருத்ர தாண்டவம் " என் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஜி எம் பிலிம் கார்ப்ரேஷ்ன பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளி குவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் " ருத்ர தாண்டவம்" மோகன்ஜி இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் மீண்டும் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார். படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது. மோகன் ஜி இயக்கும் ருத்ரதாண்டவம் படமும் சர்ர்சைக்குரியாதகுமா என்பது போகப்போக தெரியும்.

More News >>