கொரானா : தியேட்டர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் உதயகுமார் தகவல்

முழு இருக்கைகளும் நிரப்பி இயங்க அனுமதி அளித்திருந்தாலும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது.

பள்ளிகள் இயங்கினால் முழு அளவு மாணவ மாணவிகள் வருகை தர வேண்டும். ஆனால் தியேட்டர்கள் அப்படியல்ல குறிப்பிட்ட அளவு பார்வையாளர்கள் வந்தாலே போதுமானது. அதுவும் கட்டாயம் இல்லை.மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் தான் தியேட்டர்கள் முழு அளவு இயங்க அனுமதி அளித்திருந்தாலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். இதை கடைப்பிடிக்காத திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

More News >>