ஹீரோ தங்கை வேடத்தில் நடிப்பாரா பிரியாமணி..

பருத்தி வீரன் ஹீரோயின் பிரியாமணி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கன்னட பட தயாரிப்பாளரும் தனது பாய்ஃபிரண்டுமான முஸ்தபா ராஜுவை மணந்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். கடந்த ஆண்டில் அவருக்குக் கைவசம் ஒரு படமே இருந்தது. இந்த ஆண்டு அவர் கை நிறைய அரை டஜனுக்கும் மேலாகப் படங்களில் நடிக்கிறார் பிரியாமணி.

தமிழில் கொடேஷன் கேங், இந்தியில் மைதான், தெலுங்கில் நாரப்பா, கன்னடத்தில் சைனைடு என வெவ்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். எல்லா படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வரும் நிலையில் அவருக்குத் தங்கையாக நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் லூசிபர். இப்படம் வெற்றி பெற்றது. இது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மோகன்லால் மலையாளத்தில் ஏற்று நடித்த வேடத்தைத் தெலுங்கில் சிரஞ் சீவி ஏற்று நடிக்கிறார். மற்றொரு முக்கிய வேடத்தில் சத்யதேவ் நடிக்கிறார்.

இப்படத்தை தமிழில் ஜெயம் ரவி நடித்த ஜெயம் முதல் தனி ஒருவன் வரை பல படங்களை இயக்கிய மோகன்ராஜா இயக்குகிறார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு தங்கையாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் அதாவது தெலுங்கில் உருவாகும் லுசிபர் ரீமேக்கில் சிரஞ் சீவி தங்கையாக நடிக்கப் பிரியா மணியிடம் படக்குழு கேட்டுள்ளது. தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் சிரஞ்சீவியுடன் பிரியாமணி நடித்தது இல்லை. எனவே ஒப்புக்கொள்வார் என்றும், ஹீரோயின் வேடம் இல்லாமல் தங்கை வேடம் என்பதால் மறுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறதாம். இருதரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

மோகன்ராஜா தமிழில் பிரசாந்த் நடிக்கும் அந்தாதுன் இந்தி படத்தின் ரீமேக்கை இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அப்படத்திலிருந்து விலகிக் கொண்டார். அதற்குப் பதிலாக தற்போது சிரஞ்சீவியின் லுசிபர் படத்தை இயக்குகிறார். மேலும் ஜெயம் ரவிக்காக தனி ஒருவன் இரண்டாம் பாகம் ஸ்கிரிப்ட் முடித்து வைத்திருக்கிறார். தற்போது மணிரத்னம் படத்தில் ரவி பிஸியாக இருப்பதால் அப்படம் முடிந்த பிறகு தனி ஒருவன் 2ம் பாகத்தை இயக்க உள்ளார் மோகன்ராஜா.

More News >>