போலீஸ் நிலையத்தில் ஆஜரான பிரபல நடிகை..

சர்ச்சை நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் கங்கனா ரனாவத். சுஷாந்த் சிங் ராஜ் புத் தற்கொலையின் போது பாலிவுட் வாரிசு நடிகர்கள் அவமானப்படுத்தியதால் தான் சுஷாந்த் சிங் இப்படியொரு முடிவு எடுத்தார் என்று சர்ச்சையைக் கிளப்பினார். பிறகு மகாராஷ்டிரா மாநில முதல்வரின் மகன் மீது இது தொடர்பாகக் குற்றம் சாட்டினார். இதையடுத்து மகராஷ்டிரா ஆளும் கட்சி சிவசேவை நேரடியாகத் தாக்கி பேசினார். பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர்போல் மும்பை உள்ளது என்றார்.

இதனால் சிவசேனா கட்சி தொண்டர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். பிறகு முஸ்லீம்களுக்கு எதிராக மத உணர்வைத் தூண்டி கலவரம் விளைவிப்பதுபோல் கங்கனா மெசேஜ் வெளியிடுவதாக கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதுகுறித்து கோர்ட்டை அணுகி இடைக்கால உத்தரவை கங்கனா பெற்றார். முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார்.

கடந்த அக்டோபரில், கங்கனாவிடம் விசாரணை நடத்தி டிசம்பர் 5க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீச்சாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காவல் துறை அறிக்கை தாக்கல் செய்யத் தவறியதால் ஜனவரி 5 வரை அவகாசம் வழங்கப்பட்டது, ஆனால் அது மீண்டும் காலக்கெடுவைத் தவறவிட்டது .பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் காவல்துறையினருக்கு அறிக்கை தாக்கல் செய்யக் கடைசி வாய்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றம் கூறியது, இந்த வழக்கில் புகார் அளித்த வழக்கறிஞர் அலி காஷிஃப் கான் தேஷ்முக் கூறினார். ரனவுத்தின் சகோதரி ரங்கோலி சாண்டல் ஏப்ரல் மாதம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைத்து ட்விட்டரில் ஆட்சேபகரமான செய்தியை வெளியிட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவரது கணக்கு இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவித்தது.இந்த வழக்கு தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் நேற்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பாந்த்ரா காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதை ஏற்று ஆஜரானார்.

எற்கனவே மும்பை காவல் துறை இதற்கு முன் மூன்று முறை கங்கனா மற்றும் ரங்கோலிக்குச் சம்மன் அனுப்பியிருந்தது, ஆனால் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.போலீஸ் நிலையத்துக்குச் செல்லும் முன் எஃப்.ஐ.ஆர் மற்றும் நடைமுறைக்குப் பதிலளித்த கங்கனா ரனாவத் வீடியோவில் பேசி தகவல் பகிர்ந்தார். அவர் கூறியதாவது: நான் தேசத்தின் நலனுக்காகப் பேச ஆரம்பித்ததிலிருந்து, நான் நடத்தப்படும் விதமும் எனக்கு மென்ட்டல் மற்றும் உடல் ரீதியாக சித்திரவதை செய்யப்படும் விதமும், முழு நாடும் பார்க்கிறது. எனது வீடு இடிக்கப்பட்டது. விவசாயிகளின் நலனுக்காக நான் பேசியதால் தினமும் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. சிரித்ததற்காகக் கூட என் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் டாக்டர்கள் சித்திரவதை செய்யப்படுவதை எதிர்த்து என் சகோதரி ரங்கோலி எதிர்ப்புத் தெரிவித்தார்.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, எனது பெயரும் அதில் இணைக்கப்பட்டது,என்ன காரணத்திற்காக என்று எனக்குத் தெரியாவிட்டாலும், காவல் நிலையத்தில் வந்து பதில் அளிக்கும்படி எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. யாரிடமும் வெளிப்படுத்தவோ அல்லது நான் எதிர் கொள்ளும் சித்திரவதை பற்றிப் பேசவோ கூடாது என்று நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்.பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்டு அவர்களின் குரல்கள் அமைதியாக இருந்த இடைக் காலத்திற்கு நாம் திரும்பிவிட்டோமா?. இந்த சூழ்நிலையை வேடிக்கை பார்த்து மகிழ்கிற மக்களே, எங்கள் 1,000 ஆண்டுக் கால அடிமைத்தனத்தில் நாம் சிந்திய இரத்தம், கண்ணீர், அமைதியாக இருக்கும் தேசிய வாதக் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டால் மீண்டும் அது நிகழும் என்றார்.

More News >>