மாறா நாயகன் மாதவனின் மனம் திறந்த பதில்.. டிவிட்டரில் கலக்கல்..

மலையாளத்தில் வெளியான சார்லி என்ற படத்தின் தழுவல் தான் சமீபத்தில் மாதவன் நடித்து திரைக்கு வந்த மாறா என்ற திரைப்படம். மோலிவுட் எனப்படும் மலையாள திரையுலகில் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுப் பேசப்படும் படமாக அமைந்தது. ஆனால் மாறா அந்த அளவிற்கு இல்லை என்பது பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர் அதிலும் சார்லி படத்தைப் பார்த்து உங்களுக்கு இந்த படம் மிகப் பெரும் ஏமாற்றத்தைத் தரும் என்பதும் பலரது கருத்து.

அதே சமயம் பலரும் சமூக வலைத்தளங்களில் இந்த படத்தைப் பாராட்டி இருக்கின்றனர் அவர்களைத் தேடிப்பிடித்து நன்றி சொல்லி வருகிறார் படத்தின் ஹீரோவான மாதவன். இருப்பினும் ஒரு ரசிகர் தனது டுவிட்டர் பதிவில் சார்லி படம் பார்த்தவர்களுக்கு இது நிஜமாகவே ரொம்ப சுமாரான படம். முதல் 30 நிமிடங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்ப்பதே ரொம்ப கஷ்டமா இருந்தது. உண்மையில் மாதவன்தான் இந்த படத்தைக் கெடுத்திருக்கிறார். மிகவும் சோகமான, மன அழுத்தம் இருக்கும் கதாபாத்திரம் என்று பதிவிட்டு அந்த ரசிகர் மாதவனின் டிவிட்டர் கணக்கைக் டேக் பண்ணியிருந்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக மாதவன் , "ஐயோ, உங்களை ஏமாற்றியதற்கு மன்னித்து விடுங்கள் சகோ. அடுத்த முறை நன்றாக இருக்க முயல்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மாதவனின் ஒளிவுமறைவற்ற இந்த பதில் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.பலரும் இதுதாம்யா மாதவன், என்னவொரு பக்குவமான பதில் என்ற ரீதியில் கமெண்ட்கள் வந்து விடுகின்றனவாம்.

More News >>