பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?? இணையதளத்தில் கசிந்த தகவல்..

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கலக்கி கொண்டிருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றனர். வாரம் தோறும் இதனை பத்மஸ்ரீ கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 100 நாட்களை கடந்து விட்ட நிலையில் இன்று மாலை 6.00 மணிக்கு கிராண்ட் பைனல் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக ஒளிப்பரப்பாகயுள்ளது.

கடந்த சீசனின் வெற்றியாளரான முகேன் ராவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த சீசன் மற்ற சீசனை விட மிக ஸ்பெஷல் ஆன ஒன்று. ஏனெனில் இது வரை நடைபெற்ற சீசனில் யார் வெற்றியாளர் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால் இந்த சீசனில் அப்படி கிடையாது. பலர் ஆரி தான் இந்த பிக் பாஸ் சிசனின் டைட்டில் வின்னர் என்று ஆணி தனமாக சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில் இணையத்தளம் முழுவதும் டைட்டில் வின்னர் ஆரி, முதல் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ், இரண்டாவது ரன்னர் அப் ரியோ ராஜ், மூன்றாவது ரன்னர் அப் ரம்யா பாண்டியன் மற்றும் கடைசி ரன்னர் சோம் என்று வெளியாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஆரி அர்ஜுனன் சுமார் 21 கோடி ஓட்டில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

More News >>