14 வயது சிறுமி பலாத்காரத்திற்கு பின் உயிரோடு குழி தோண்டி புதைப்பு தந்தையின் நண்பர் கைது

14 வயது சிறுமியை அவரது தந்தையின் நண்பர் கொடூரமாகப் பலாத்காரம் செய்து, கல்லால் தாக்கி குழி தோண்டி புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பைதுல் என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.மத்திய பிரதேச மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பைதுல் என்ற இடத்தை சேர்ந்தவர் சுசில் வர்மா (36). அதே பகுதியில் இவருக்கு ஒரு நெருங்கிய நண்பர் உள்ளார். அவருக்கு 14 வயதில் ஒரு மகள் உண்டு.

சுசில் குமார் தன்னுடைய நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவரது மகளை அவர் நோட்டமிட்டு உள்ளார். சுசில் குமாரின் நண்பருக்கு அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அங்கு தந்தையுடன் மகளும் செல்வது உண்டு. இந்நிலையில் சம்பவத்தன்று வயலில் மோட்டாரை ஆப் செய்வதற்காக அந்த சிறுமி சென்றுள்ளார். இதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அந்த சிறுமியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணையில் அந்த வயல் பகுதியிலேயே ஒரு இடத்தில் அந்த சிறுமி குழிதோண்டிப் புதைக்கப்பட்ட நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் இந்த சிறுமி நாக்பூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் அந்த சிறுமியின் தலையில் பலமாகக் கல்லால் தாக்கிய காயங்களும் இருந்தன. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த விசாரணையில் அந்த சிறுமியை பலாத்காரம் செய்தது சுசில் குமார் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News >>