சசிகலாவுக்கு மூச்சுத்திணறல்: சிறையில் சிகிச்சை

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி 4 ஆண்டுகளுக்கு மேல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆக உள்ளார்இந்த நிலையில் திடீரென சசிகலாவுக்குச் சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது.சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.வரும் 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில் திடீர் உடல்நலக் குறைவு சசிகலாவின் ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாவது ஒட்டி இப்போதிலிருந்தே தமிழகம் முழுக்க ஆமா மு க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்களைத் துவங்கிவிட்டனர் இந்த நிலையில் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நிலை குறைவால் இந்த கொண்டாட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

More News >>