சுஷாந்த் மரணத்துக்கு பிறந்த நாளில் நீதி கேட்கும் சகோதரி.. இணையதள உறுதிமொழி ஏற்க அழைப்பு

இன்று ஜனவரி 21 மறைந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் 35 வது பிறந்த நாள். அவரது சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, மறைந்த நடிகரின் பழைய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை சரித்திர படத்தில் நடித்துப் புகழ் பெற்ற நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று இறந்தார். மும்பையில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கில் பிணமாகக் கிடந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணம் குறித்து விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையில் சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக நடிகையும் அவரது காதலியுமான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் தரப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீண்ட நாள் சிறைச் சாலையிலிருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். சுஷாந்த்துக்கு இன்று பிறந்த தினம். இதையொட்டி அவரது சகோதரி ஸ்வேதா, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பழைய படங்களின் படத்தொகுப்பைத் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். சுஷாந்த் குழந்தைப் பருவத்திலிருந்தே உள்ளது. சிறிய சுஷாந்த் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருப்பதைக் காணலாம். அதே நேரத்தில் அவரது சகோதரிகளில் ஒருவர் அவருக்கு இனிப்புகளை அளிக்கிறார்.

வானியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு நிதியை அமைக்க வேண்டும் என்று சுஷாந்த் சிங் ராஜ்புத் கனவு கண்டார். அவரது கனவுவை நிறைவேற்றி, அவரது குடும்பம் இறுதியாக பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், 35 ஆயிரம் டாலர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரில் நினைவு நிதியை அமைத்துள்ளது. இதுகுறித்து குறிப்பிட்ட ஸ்வேதா "சுஷாந்தின் 35 வது பிறந்தநாளில், அவரது கனவுகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். யுசி பெர்க்லியில் 35,000 டாலர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நினைவு நிதி அமைக்கப்பட்டுள்ளது. யு.சி. பெர்க்லியில் வானியற்பியல் தொடர ஆர்வமுள்ள எவரும் இந்த நிதிக்கு விண்ணப்பிக்கலாம். அதை சாத்தியமாக்கிய தேவதூதர்களுக்கு நன்றி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் சகோதரரே, நீங்கள் எங்கிருந்தாலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்! லவ் யூ. இன்று சுஷாந்த் டே என குறிபிட்டுள்ளார்.

மேலும் அவர் நடிகர் இறந்து ஆறு மாதங்கள் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றிவைத்த புகைப் படத்தைப் பகிர்ந்துள்ளார். "நாங்கள் முழு உண்மையையும் அறியும் வரை நீதிக்காகப் போராடுவேன் என்று உறுதியளிக்கிறேன். கடவுள் தான் எங்களுக்கு வழிகாட்டி வழியைக் காட்டட்டும். Oath4SSR" ஆன்லைன் சத்தியப் பிரமாணம் இயக்கத்தில் பங்கேற்குமாறு சுஷாத்தின் ரசிகர்களையும் அவர் வலியுறுத்தி ஒரு வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார் ஸ்வேதா.சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இ.டி) ஆகிய வை முறையே மருந்து கள் மற்றும் நிதி கோணங்களில் விசாரிக்கின்றன.

More News >>