வில்லன் நடிகரை காதலித்து மணக்கும் நடிகை..

பாலிவுட்டில் சில நட்சத்திரங்களின் காதல் வித்தியாசமானதாக அமைகிறது. ரன்பீர் கபூர் நடிகை கேத்ரினா கைபை காதலித்தார். பலவருடங்கள் இருவரும் டேட்டிங் செய்தனர். லிவிங் டு கெதர் பாணியில் வாழ்ந்தனர். ஒரு கட்டத்தில் இந்த காதலுக்கு ரன்பீர் குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரன்பீர் கபூர் காதலை பிரேக் அப் செய்துகொண்டார். தற்போது அலியா பட் உடன் ரன்பீர் காதல் கொண்டிருக்கிறார். இவர்கள் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வில்லன் நடிகருக்கு நடிகையுடன் காதல் மலர்ந்திருக்கிறது விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தில் பயங்கர வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். ஜெயம் ரவியின் மழை, அர்ஜுனின் பரசுராம், ஜெய்ஹிந்த் 2, விக்ரம் நடித்த பத்து என்றதுக்குள்ள உள்ளிட்ட பல்வேறு தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். ராகுல் தேவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகனும் உள்ளார்,.அவரது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.மறுமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லாமலிருந்தவர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

ஆனாலும் இந்தி நடிகை முத்தா கோட்ஸேவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வந்தார். முக்தா கோட்ஸே தமிழில் தனி ஒருவன் படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்தவர். இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். ராகுல் தேவுக்கும், முக்தாவுக்கும் 14வயது வித்தியாசம் உள்ளது. ஆனால் இருவரும் காதலிப்பது உறுதி செய்துள்ளார் முக்தா கோட்ஸே. இதுபற்றி அவர் கூறும்போது, 'காதல் வயதைப் பார்த்து வருவதில்லை. மனதைப் பார்த்து வருவது அப்படித்தான் எங்கள் காதல் மலர்ந்தது. ஜூலை 3ம் தேதி எங்கள் சந்திப்பு நடந்தது அதைக் கொண்டாடி வருகிறோம். காதல் உணர்வுப் பூர்வமானது'என்றார். காதல் டேட்டிங் பற்றி பகிர்ந்த முக்தா திருமணம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

More News >>