அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா மனைவியை முந்திய ஏஞ்சலினா..

‘யூகோவ்’ என்ற நிறுவனம்  சர்வதேச அளவில் மக்களை கவர்ந்த பிரபலங்கள் என்ற பட்டியல் ஒன்றை தயார் செய்தது. இதற்காக ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 35 நாடுகளை சேர்ந்த 37 ஆயிரம் பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

முதலில் மக்களை கவர்ந்த 20 ஆண்கள் பிரிவில் முதலிடத்தில் இருப்பவர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்.இரண்டாவது இடத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், மூன்றாவது இடத்தில் நடிகர் ஜாக்கிஜானும், நான்காவது இடத்தில்  சீன அதிபர் சி ஜின்பிங்-ம் உள்ளனர்.

பெண்கள் பிரிவில் முதலிடத்தில் இருப்பவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. அவரை தொடர்ந்து  இரண்டாவதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உள்ளார், மூன்றாவது இடத்தில ஒப்ரா மற்றும் நான்காவது இடத்தில வின்பிரே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா சார்பில்  மக்களை கவர்ந்த பெண் என்ற பிரிவில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா 12-வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும், அமெரிக்க டி.வி. தொடரிலும் நடித்து பிரபலம் ஆகியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>