காதல் கண்ணை மறைக்கும் என்பது இதுதானா?? எய்ட்ஸ் நோயாளியுடன் உறவு கொண்ட காதலி.. அலறும் பெற்றோர்கள்..

கல்லூரி மாணவி தனது காதலனான எயிட்ஸ் நோயாளியுடன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் குமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவர் 17 வயது பெண். இவர் நாகர்கோயிலில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் சில நாட்களாக காணவில்லை. இவரது பெற்றோர்கள் எங்கு தேடி அலைந்தும் தனது மகள் காணவில்லை என்பதால் பக்கத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸ் பெற்ற புகாரின் அடிப்படையில் அப்பெண்ணை தேடி அலைந்தனர்.

பெண்ணின் நண்பர்களிடம் விசாரித்ததில் அந்த பெண்ணும் அவரது தெருவில் ஆட்டோ ஓட்டி கொண்டிருந்த வாலிபரும் ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு ஓடி தனியாக வீடு எடுத்து வாழ்ந்துள்ளனர். இருவரும் எங்கே இருக்கின்றனர் என்ற செய்தி தெரியவர அவ்விடத்திற்கு போலீஸ் மற்றும் அப்பெண்ணின் பெற்றோர்களுடன் விரைந்தனர். அங்கு பெண்ணிடம் விசாரிக்கும் பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அந்த வாலிபருக்கு ஏற்கனவே எயிட்ஸ் நோய் இருக்கிறது.

இது அந்த பெண்ணிற்கு தெரிந்து தான் அவர் மேல் இரக்கப்பட்டு, அவரோடு வீட்டை விட்டு ஓடிவந்ததாக அந்த பெண் தெரிவித்துள்ளார். இதனால் அப்பெண்ணின் பெற்றோர்கள் துடிதுடித்து அழுதனர். இதனால் பெற்றோரும், போலீசஸும் என்ன செய்வதென்று புரியாமல் முழித்தனர். இருப்பினும் அந்த பெண்ணுக்கு வயது 17 என்பதால் மைனர் அடிப்படையில் அந்த வாலிபரை போக்ஸோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது. இருவரும் வீடு எடுத்து நெருக்கமாக இருந்ததால் அப்பெண்ணை பரிசோதனை செய்ய நாகர்கோயில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

More News >>