எல்லை மீறும் இந்தி பிக் பாஸ்.. ராக்கி மற்றும் அபிநவ்வின் புதிய நெருக்கம்.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்..

இந்தி பிக் பாஸ் சீசன் 14 நிகழ்ச்சி மிக பரபரப்பான கட்டத்தில் நடந்து கொண்டு வருகின்றது. இதனை நடிகர் சல்மான் கான் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். மற்ற சீசனை விட இந்த சீசன் மிகவும் சலிப்பாக உள்ளது என்று மக்கள் தங்கள் கருத்துகளை அள்ளி தெளித்து வருகின்றனர். இதனால் சுவாரசியத்தை அதிகரிக்க புதிய ஒரு கதையை நிகழ்ச்சியில் நுழைத்துள்ளனர். இது வரை எந்த மொழி பிக் பாஸிலும் இப்படி நடந்தது கிடையாது. ராக்கி என்பவர் பிக் பாஸ் வீட்டில் அடியெடுத்து வைத்ததில் இருந்து ஒரே பிரச்னை தான்.. ஒரு கட்டத்தில் நிற்க்காமல் மேலும் வளர்ந்து கொண்டே வருகின்றது.

அதுமட்டும் இல்லாமல் இவரின் வருகைக்கு பிறகு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். ராக்கி இங்கிலாந்தில் உள்ள தொழில் அதிபரை மணந்ததாக பிக் பாஸ் வீட்டில் கூறி இருந்தார். ஆனால் அப்படி ஒரு வரை யாரும் பார்க்கவில்லை என்பதால் இது முற்றிலும் பொய் என்று சலசலக்கப்படுகிறது. இந்நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டின் சக போட்டியாளரான அபிநவ்விடம் மிக நெருக்கமாக பழகி வருகின்றனர். அபிநவ் ஏற்கனவே திருமணம் ஆனவர். ராக்கி எங்கே சென்றாலும் அபிநவ்வும் பின்னாடியே செல்வது தான் இவரது வேலை போல..

இந்த கள்ளக்காதலை சல்மான் கான், கண்டும் காணாமல் அமைதி காப்பது ஏன் என்று ரசிகர்கள் தரப்பில் பல கேள்விகள் எழுந்துள்ளது. ஒரு வேலை டிஆர்பிக்காக சித்தரிக்கப்படுகிறதா?? என்ற எண்ணமும் பலரிடம் தோன்றுகிறது. பிக் பாஸில் காதல் மலருவது வழக்கம். ஆனால் இந்த சீசனில் கள்ளக்காதல் முளைத்துள்ளது. இந்நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்ப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் தவறான பழக்கத்தை கற்று தருவது போல இந்த சம்பவம் அரங்கேறி வருகிறது. இது எங்கே போய் முடியும் என்று நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

More News >>