இரண்டாவதும் பெண் குழந்தை.. விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை..

முதல் குழந்தையும் பெண்ணாக இருக்க இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் மன விரக்தியில் நான்கு வயது குழந்தையை காலால் எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், லூதியானா பகுதியை சார்ந்தவர் டிங்கு யாதவ். இவரது மனைவி பிரியங்கா.இவர்களுக்கு திருமணம் ஐந்து வருடம் ஆகிறது. திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கர்ப்பம் தரித்து முதலாவதாக பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அந்த குழந்தைக்கு 4 வயது ஆகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். முதல் குழந்தை பெண் என்பதால் நிச்சயமாக இரண்டாவது ஆண் குழந்தை தான் என்று உறவினர்கள் ஆணி தனமாக அடித்து கூறி வந்துள்ளனர். இந்த சூழலில் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கணவன் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இவருக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியங்காவிடம் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லை.

பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க கூட யாரும் வரவில்லையாம். மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பிரியங்காவை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி முதல் குழந்தையை பாத்ரூமில் எட்டி உதைத்து சுவற்றில் முட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை போலீஸ் கைது செய்து வழக்கை மேலும் விசாரித்து வருகின்றனர்.

More News >>