விலகிய சிறுமியின் மேலாடையை சரி செய்த ராகுல்.. பார்வையாளர்களை கவர்ந்த அன்பான செயல்..

செல்பி எடுக்க வந்த சிறுமியின் ஆடை விலகி இருந்ததால் அதை உடனே சரி செய்த ராகுலை மக்கள் அன்பானவர் என்று வாழ்த்தி வருகின்றனர். ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு சென்று தனது சிறப்பு மிக்க பேச்சால் பிரச்சாரம் செய்து வருகிறார். இவரது பேச்சு, தோரணை போன்றவையால் தமிழ் மக்களை ஏற்கனவே கவர்ந்துவிட்டார் என்று பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் 25 ஆம் தேதி ராகுல் காந்தி கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரை நோக்கி செல்பி எடுக்க ஆசை ஆசையை ஓடி வந்த சிறுமியை தனது பிரச்சார வண்டில் மேலே ஏற்ற தனது கையை கொண்டு சிறுமியை தூக்க உதவினார். அப்பொழுது சிறுமியின் ஆடை சற்று விலகி இருந்ததால் அதை உடனே சரி செய்து விட்டு அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்றினார்.

அவரே சிறுமியின் கையில் இருந்த போனை வாங்கி செல்பி எடுத்தார். இதை விடியோவாக எடுத்த குமார் துரைசாமி என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் அன்பானவர், மனிதநேயமிக்கவர். அவரின் நல்ல குணம் சிறுமியின் ஆடையை சரி செய்ததில் அடங்கி இருக்கிறது என்று ராகுல் காந்தி பற்றி சிறப்பாக பதிவிட்டு இருந்தார். இதனை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ரீ டுவீட் செய்திருந்தார்.

More News >>