இப்போதே முதல்வர் போல் நடக்கிறார் ஸ்டாலின் : சரத்குமார் காட்டம்

இன்னும் தேர்தல் குறித்த அறிவிப்பே வரவில்லை அதற்கு முதல்வராகி விட்டது போல் நடந்து கொள்கிறார் மு. க. ஸ்டாலின். அவர் என்னை எப்படி கூட்டணிக்கு அழைப்பார் என்று சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் நடிகருமான சரத்குமார், கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது : ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயக படுகொலை. அமெரிக்க தேர்தலை போன்று பொதுமக்களிடம் தலைவர்கள் விவாதம் செய்தால் நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கலாம். பணம் பெற்று வாக்களித்தால் அது உங்களுடைய எதிர்கால சந்ததியை சீரழித்து விடும். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் புரட்சி வெடிக்கும் எனப் பேசினார்.

கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமாரிடம்திமுக கூட்டணியில் அழைத்தால், செல்வீர்களா என செய்தியாளர்கள் கேட்க அதற்கு அவர் , மு. க. ஸ்டாலின் இப்போதே முதல்வராகி விட்டது போல அல்லவா செயல்படுகிறார். அப்புறம் எப்படி எங்களை அழைப்பார் என்றார்.

More News >>