சசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது.. மருத்துவமனை தகவல்..

சசிகலாவுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா கடந்த 27ம் தேதி முறைப்படி விடுதலையாகி விட்டாலும், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று பாதித்திருந்ததாலும், சர்க்கரை அளவு அதிகரித்திருந்ததாலும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று(ஜன.30) பெங்களூரு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் வெளியிட்ட அறிக்கையில், சசிகலா நடராஜனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது அந்நோய் அறிகுறி மட்டுமே உள்ளது. மேலும், உடலில் சர்க்கரை அளவு, ஆக்சிஜன் அளவு போன்ற அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. டாக்டர்கள் அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News >>