தொடர்ந்து 4 மணி நேரம் ஆன்லைனில் விளையாட்டு.. திடீரென்று சிறுவன் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..

புதுச்சேரியில் தொடர்ந்து நான்கு மணி நேரம் ஆன்லைனில் கேம் விளையாடிய சிறுவன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனுரை சார்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு தர்ஷன் என்ற பெயரில் 16 வயது மகன் உள்ளார். தர்ஷன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கொரோனா பரவல் அதிகமாகயுள்ளதால் கடந்த 10 மாத காலமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் தர்ஷன் பெற்றோரின் செல்போனை எடுத்து ஃபயர்வால் கேம்மை பதிவிறக்கம் செய்து இடைவிடாமல் தொடர்ந்து நான்கு மணி நேரமாக காதில் ஹெட்செட்டை அணிந்து விளையாடியுள்ளார். இதனால் திடீரென்று தர்ஷன் மயங்கி விழுந்ததால் பெற்றோர் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தர்ஷனை பரிசோதித்த மருத்துவர் சிறுவனை கொண்டு வரும் வழியிலே உயிர் பிரிந்து விட்டது என்று கூறியவுடன் தர்ஷனின் பெற்றோர்கள் இழந்த மகனை கண்டு கதறி கதறி அழுதனர். நாளுக்கு நாள் சிறுவர்கள் செல்போனில் கேம் விளையாடி உயிர் இழக்கும் சம்பவம் அதிமாகி வருகிறது.

More News >>