கொரோனா லாக்டவுன் எபெஃக்ட்: அதிகரிக்கும் காமெடி படங்கள்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பீட்ஸா படத்துக்கு பிறகு இன்னமும் திகில் படங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன. அதற்கு வரவேற்பும் உள்ளது. அதேசமயம் கொரோனா லாக்டவுனில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த மக்கள் ஆன்லைனில் அதிகம் தேடியது காமெடி படங்களையும், காமெடி காட்சிகளையும். வீட்டுக்குள் அடைந்து டென்ஷன் அதிகரித்திருந்த நிலையில் இதுபோன்ற படங்களும், காட்சிகளும்தான் எல்லோரையும் ரிலாக்ஸில் ஆழ்த்தியது. சமீபகாலமாக உருவாகும் படங்களும் காமெடி களத்தில் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் புதிதாக உருவாகிறது தீனி. இதில் அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடிக்கின்றனர்.

இதன் ட்ரெய்லர் பிப்ரவரி 5 (நாளை) வெளியாகிறது. அனி ஐ.வி. சசி இயக்கும் இப்படத்தினை பாபிநீடுபி வழங்குகிறார். தென்னிந்தியாவின் பிரபல நிறுவனங்களான ஸ்ரீ வெங்டேஷ்வரா சினி சித்ரா எல் எல் பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தினை தயாரிக்கின்றன. இப்படம் பற்றி தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத் கூறியதாவது: இது முழுக்க உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த அட்டகாசமான பொழுது போக்கு திரைப்படம் ஆகும். அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும்.

மிக சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். தற்போது வரும் பிப்ரவரி 5 (நாளை) காலை 11 மணிக்கு படத்தின் ட்ரெய்லரை வெளியிடவுள்ளோம். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப் பட்டு, போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் திரைவெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இப்படத்தை திவாகர் மணி ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் முருகேசன் இசை அமைக்கிறார். ஶ்ரீமணி பாடல்கள் எழுதுகிறார். நாக சந்தா, அனுஷா, ஜெயந்த் பனுகண்டி வசனம் எழுதுகின்றனர். ஶ்ரீ நாகேந்திரா தங்கலா அரங்கம் அமைக்கிறார். நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இவ்வாறு தயாரிப்பாளர் பிவிஎஸ்என் பிரசாத் கூறினார்.

More News >>