மெட்ரோ ஊழியர்களுக்கு சச்சின் அளித்த இன்பதிர்ச்சி (வீடியோ)

மகாராஷ்டிரா மாநிலத்தில் பணிபுரிந்த வந்த மெட்ரோ ஊழியர்களுடன் சச்சின் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்தார். இதன் வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். தனது சிறந்த ஆட்டத்தினால் உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் சச்சின் சிறந்த முன்னோடியாகவும், கடவுளாகவும் இருக்கிறார். சமீபத்தில், சச்சினின் எளிமையான செயல் அனைவரையும் ஆச்சரயப்படுத்தியது.

மகாராஷ்டிரா மாநிலம், பந்த்ரா பகுதியில் மெட்ரோ பணி நடந்து வருகிறது. இங்கு பணிபுரியும் இளைஞர்கள் சிலர் பொழுதுபோக்கிற்காக சாலையோரத்தில் இரவில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அதன்படி, சமீபத்தில் மெட்ரோ ஊழியர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற சச்சின், தனது காரில் இருந்து இறங்கி அந்த ஊழியர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.

இதை சற்றும் ஊழியர்கள் எதிர்பார்க்காததால் இன்பதிர்ச்சி அடைந்தனர். சற்று நேரம் கிரிக்கெட் விளையாடிய சச்சின் பின்னர் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>