ரஜினி பட இயக்குனர் தயாரிக்கும் எழுத்தாளர் கதை..

நாவல்கள், புராணங்கள், உண்மைக்கதைகள் திரைப்படமாகின்றன. எழுத்தாளர் சுஜாதா நாவல் முதல் கல்கியின் பொன்னியின் செல்வன் வரை திரைப்படமாகிறது. ரஜினி நடித்த கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா .ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, படங்களைத் தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது குதிரைவால் திரைப்படமும் தயாரித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.தொடர்ந்து "ரைட்டர்" மற்றும் "பொம்மை நாயகி" படங்கள் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கும் "சேத்துமான்" எனும் படமும் படப்பிடிப்பு நிறைவுபெற்று வெளியீட்டிற்குத் தயாராக இருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையைத் திரைப்படமாகத் தயாரித்திருக்கிறார் pa.ரஞ்சித்.இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருக்கும் ( IFFK (International Film Festival Of Kerala) திரையிடலுக்காகத் தேர்வாகியிருக்கிறது "சேத்துமான் "திரைப்படம்.

இப்படத்தை பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.சி.எஸ் பிரேம் குமார் எடிட்டிங் செய்கிறார். பிந்து மாலினி இசை அமைக்கிறார். யுகபாரதி, பெருமாள் முருகன், முத்துவேல் பாடல்கள் எழுதுகின்றனர்.ஜெய்குமார் கலை அமைக்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சி அளிக்கிறார் ஆண்டனி பி ஜே ருபன் ஒலி வடிவமைப்பு செய்கிறார்.பெருமாள் முருகன் கதை வசனம் எழுதுகிறார்.பா ரஞ்சித் கடந்த 2018ம் ஆண்டு காலா படம் இயக்கினார். அதன்பிறகு இரண்டு வருடம் படம் இயக்காமல் இருந்தார். கபாலி 2ம் பாகம் இயக்குவார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஆனால் அது உருவாகவில்லை. பொதுவாக ரஜினிகாந்த் 2ம் பாக கதைகளைத் தவிர்த்து விடுகிறார். சந்திரமுகி 2ம் பாகம், பாட்ஷா 2ம் பாகம் உருவாகும் என்று. முன்பு கூறப்பட்டது.

ஆனால் சந்திரமுகி 2ம் பக்கத்தில் நடிக்க இயக்குனர் பி.வாசு கேட்டபோது மறுத்துவிட்டார். தற்போது சந்திரமுகி 2ம் பாகம் லாரன்ஸ் நடிப்பில் உருவாகவிருக்கிறது.பா.ரஞ்சித் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சர்பட்டா பரம்பரை என்ற படத்தை தற்போது இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

More News >>