கல்யாண ஆசையில் சின்னத்திரை நடிகை.. மாப்பிள்ளை தேடும் தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவர்..

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இப்பொழுது சீரியலின் கதாநாயகியாக நடித்து வருகின்றவர் தான் ஜாக்குலின். இவரது குரலை 'தேஞ்சி போன ரேடியோ' என்று பலரும் அவரது கண்முன்னே கிண்டல் அடித்து வந்தனர். ஆனால் அந்த குரலாலே இவரது வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைத்தது. இவரை சமூக வலைத்தளங்களில் கேலி அடிக்காத ஆளே இருக்க முடியாது. இருப்பினும் ஜாக்குலின் எதையும் காதில் வாங்காமல் தனது கடின உழைப்பை மட்டுமே நம்பி இந்த உயரத்தில் வளர்ந்துள்ளார். இவர் இப்பொழுது 'தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவர்' என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இது முன்னணி சீரியலாகவும் திகழ்ந்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் பல போட்டோ ஷூட்டிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்து வந்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கேட்டதற்கு, மாப்பிளை பார்த்து கொண்டு இருக்கின்றனர், நீங்களும் நல்ல மாப்பிள்ளை யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று கிண்டலாக கூறி இருந்தார். லாக்டவுனில் பல சின்னத்திரை நடிகைகள் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் கூடிய சீக்கிரம் ஜாக்குலினும் இடம்பிடித்துவிடுவார் போல..

More News >>