சசிகலாவை வரவேற்று அதிமுக சார்பில் பேனர் : ராஜபாளைய ரவுசு

ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்று அதிமுக பெயரில் வைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பையும் அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் வைத்தது போன்று பேனர் வைக்கப்பட்டுள்ளது.இதை வைத்தது யார் என்று குறிப்பிடப்படாததால் அதிமுகவினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் முடங்கியாகச் செல்லும் சாலையில் சம்மந்தபுரம் தெருவில் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது அதில் 9 வது வார்டு அ இஅதிமுக என்று பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துரோகிகளை மட்டுமல்ல எதிரிகளையும் வீழ்த்தி தமிழக அரசியலில் மாற்றம் சக்தியே வருக வருக என 9-வார்டு அஇஅதிமுக சம்மந்தபுரம் ராஜபாளையம் என்ற பசங்க இடம்பெற்றுள்ளது இருந்தது. இதை வைத்தது யார் என்று தெரியாத நிலையில் அதிமுகவினரிடையே குழப்பம் நீடித்து வருகிறது. இதுகுறித்து ராஜபாளையம் நகர அதிமுக செயலாளரான ராணா பாஸ்கர் ராஜ் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

More News >>