சினிமா வாய்ப்புக்காக என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்.. பாகுபலி நடிகை ஒபன் டாக்..

தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்த்தை பிடித்தவர் அனுஷ்கா. ஹீரோ இல்லாமல் ஹீரோயின் மட்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேணும். அந்த தகுதி தமிழ் சினிமாவில் சிலருக்கு தான் உள்ளது. சினிமாவில் பலவற்றை சாதித்து இருந்தாலும் சில நடிகைகளுக்கு இது கனவாக தான் இன்றும் இருந்து வருகிறது. ருத்ரமாதேவி, பாகமதி போன்ற படங்களில் பெண் சிங்கமாக தனித்து நின்று பட்டையை கிளப்பியுள்ளார். சூர்யா முதல் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டுள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு என பல மொழிகளில் பம்பரமாக சுற்றி வருகிறார்.

அண்மையில் இவர் மாதவன் உடன் சேர்ந்து நடித்த சைலன்ஸ் திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது. திகில் நிறைந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. பாகுபலி திரைப்படத்தில் இருந்து அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவருக்கும் காதல் கிசுகிசுக்கப்படுகிறது. அனுஷ்காவும் இதற்கு ஏற்றார் போல எந்த புது திரைப்படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். இவர் சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை பற்றி முதல் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார். இவர் கூறியதாவது:- எல்லா துறையிலும் பாலியல் தொல்லை என்பது ஒன்று உள்ளது. இது சினிமா என்பதால் இது போன்ற செய்திகள் வெளிச்சத்திற்கு வருகிறது.

ஆனால் சில பெண்கள் பொறுத்து கொண்டு காலத்தை கழித்து வருகின்றனர். சில தைரியமான பெண்கள் மீ டூவில் புகார் அளிக்கின்றனர். நான் முதல் முதலில் சினிமாவிற்குள் நுழைந்த பொழுது என்னையும் சிலர் படுக்கைக்கு அழைத்தார்கள். ஆனால் நான் நடந்து கொண்ட விதத்தை பார்த்து இவர் அதற்கு சரி பட்டு வரமாட்டார் என்று தெரிந்தவுடன் அந்த நோக்கத்துடன் யாரும் என்னை நெருங்கவில்லை. ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லாத பொழுது அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவது சட்டப்படி குற்றம் என்று அனல் பறக்கும் விதமாக சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

More News >>