கடவுளுக்கு 6 வயது மகனை நரபலி கொடுத்த கொடூர தாய்.. பெருகி வரும் மூடநம்பிக்கையால் மக்கள் அதிர்ச்சி..!

கேரளாவில், அல்லாஹ்வுக்கு காணிக்கையாக கொடுக்கிறேன் என்று 6 வயது மகனை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள பாலக்காட்டை சேர்ந்தவர் சுலைமான். இவர் சில ஆண்டுகளாக வளைகுடாவில் வேலை செய்துவந்துள்ளதை அடுத்து சொந்தமாக ஆட்டோ வாங்கி பாலக்காட்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஷஹிதா. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் கடந்த ஞாயிற்று கிழமை அன்று விடியற்காலை 4 மணிக்கு பாலக்காட்டில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு ஷஹிதா என்பவர் தனது 6 வயது மகனை அல்லாஹ்வுக்கு நரபலி கொடுக்கவுள்ளார் என்று கூறி போனை துண்டித்து விட்டார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஷஹிதா வீட்டிற்கு படையெடுத்தது. வீட்டின் வாசலில் ரத்தக்கரையோடு உட்கார்ந்திருந்த ஷஹிதாவை பார்த்துவிட்டு மிகுந்த அச்சத்துடன் போலீஸ் வீட்டிற்க்குள் சென்றது. பாத்ரூமில் 6 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்திருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை பற்றி எதுவும் தெரியாமல் ஷஹிதாவின் கணவரும் மற்றும் 2 மகன்களும் வேற அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளனர். போலீஸ் ஷஹிதாவை விசாரித்த பொழுது எனது மகனை அல்லாஹ்வுக்கு நரபலி கொடுத்துவிட்டேன் என்று துணிச்சலாக கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஷஹிதா 3 மாதம் கர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீஸ் ஷஹிதா மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

More News >>