கனிமொழி வேல் வாங்க மறுத்தது ஏன்? ஹெச்.ராஜா வெளியிட்ட ரகசியம்

மதுரையில் கனிமொழிக்கு அளிக்கப்பட்ட வேறு பித்தளையில் இருந்ததால்தான் அவர் அதை வாங்கவில்லை என்று ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார். கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அவர் கூறியதாவது: வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பாக கற்பனையான பாதிப்பை உருவாக்கிக் கொண்டு நம் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டு வருகிறது. எந்த ஒரு நியாயமும் இல்லாமல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உலக அரங்கில் பாரத மாதாவின் முகத்தில் கரி பூச வேண்டுமென்ற தீய நோக்கத்துடேன எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

2019ம் ஆண்டிற்கு பிறகு திமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் எப்போதும் முன்னுக்கு பின் முரணாக உளறலாக பேசுகிறார். சசிகலா என்ன வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். அமமுகவில் தினகரன் இடத்தில் சசிகலா வரலாம். அதே சமயம் சசிகலா வருகை காரணமாக அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்காகவே துவங்கப்பட்டது. அங்கு 5 ம் வகுப்பு வரை உள்ளுர் மொழி படிக்க வழிவகை இருக்கிறது. தமிழுக்காக செயல்படும் ஒரே அரசியல் கட்சி பாஜக தான். பல மொழி படிப்பது பன்முகத்தன்மை. அதை திராவிட இயக்கங்கள் அழிக்க நினைக்கின்றனர். ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்துவை கைது செய்யாமல், முகமது நபிகளை இழிவாக பேசியதாக கூறி கல்யாணராமனை கைது செய்தது பாரபட்சமானது.

ஆலயங்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என்ற ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் கருத்து சரியானதுதான். இப்போது எல்லா கட்சிகளிலும் மேல் கொடுப்பது பேஷனாகிவிட்டது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி தனக்கு கொடுக்கப்பட்ட வேலை வாங்க மறுத்து இருக்கிறார். அது வெள்ளி வேலாக இருந்திருந்தால் கனிமொழி அதை வாங்கியிருப்பார். ஆனால் அவருக்குக் கொடுத்தது பித்தளை வேல் என்பதால் தான் வாங்கவில்லை. இதுதான் கனிமொழி வேல் வாங்காததன் ரகசியம். தமிழ்நாட்டில் பீ டீம் இல்லை. அதிமுக - பாஜக நாங்கள் ஒரே டீம். நாடாளுமன்ற தேர்தலை போல சட்டமன்ற தேர்தலிலும், தொகுதி பங்கீடு சுமூகமாக நடக்கும். எங்களது கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்றது போல தொகுதி பங்கீடு இருக்கும்.

More News >>