அரைமணி நேரம் ஆபாசப் படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆபாச வீடியோவில் நடித்ததாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகை கெஹனா வசிஷ்ட் அரை மணி நேரம் நடிப்பதற்குச் சம்பளமாக 3 லட்சம் ரூபாய் வாங்கியது தெரியவந்துள்ளது.மும்பை அருகே உள்ள மலாடு என்ற இடத்தில் உள்ள ஒரு தீவில் ஆபாச வீடியோ தயாரிக்கப்பட்டு வருவதாக மும்பை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆபாச படத்தில் நடித்த பாலிவுட் நடிகை கெஹனா வசிஷ்ட் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் இந்தியில் சில படங்களில் நடித்துள்ள ரோயா கான் என்ற நடிகையும் கைது செய்யப்பட்டார்.

ஆபாச வீடியோ எடுக்கப்பட்ட இடத்திலிருந்து கேமராக்கள், ஏராளமான ஸ்மார்ட் போன்கள், மெமரி கார்டுகள் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெப் தொடரில் நடிப்பதற்காக என்று கூறி இளம் பெண்களை அழைத்து வந்து ஆபாச படத்தில் நடிக்க வைத்தது தெரியவந்தது.இந்த ஆபாசப் படங்களை கெஹனா வசிஷ்ட் தன்னுடைய சொந்த இணையதளத்திலும், வேறு பல ஆபாச இணைய தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். தனது சொந்த இணையதளத்தில் இந்த ஆபாச படங்களை பார்ப்பதற்கு 2000 ரூபாய் கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்.

தன்னுடைய இணையதளத்தில் இவர் இதுவரை 80க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இந்தியில் லக்னோவி இஷ்க், தால் மே குச் காலா ஹெ உள்படப் பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் இவர் நடித்துள்ளார். ஏக்தா கபூர் தயாரித்த கந்தீ பாத் என்ற வெப் தொடரில் இவர் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் அரைமணி நேரம் ஆபாச வீடியோவில் நடிப்பதற்கு நடிகை கெஹனா வசிஷ்ட் 3 லட்ச ரூபாய் வாங்கி வந்தது தெரியவந்துள்ளது. இவர் ஜீவி புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஆபாச காணொளிகளை வி டிரான்ஸ்பர் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பி வந்துள்ளார். மாடல் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்த உமேஷ் காமத் என்பவர் இதற்கு உதவியுள்ளார். அவரை மும்பை போலீசார் இன்று கைது செய்தனர். ஆபாச படத்தில் நடிக்கும் மற்ற இளம்பெண்களுக்குச் சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகக் கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.

More News >>