மஹாபாரத காலத்திலேயே இண்டர்நெட் வசதி - பாஜக முதல்வர் விஞ்ஞான கண்டுபிடிப்பு

மஹாபாரத காலத்திலேயே இந்தியாவில் செயற்கைக்கோள்கள் மற்றும் இணையதள வசதிகள் இருந்ததாக கூறி, திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லாப் குமார் தேப் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் கம்யூட்டர் மயமாக்கல் மற்றும் சீர்திருத்தம் குறித்து செவ்வாயன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய திரிபுரா முதலமைச்சர், ”குருசேத்திர போரில் நடந்தவற்றை எல்லாம், பார்வைத்திறனற்ற திருதராஷ்டிரருக்கு அவரது தேரோட்டி சஞ்சயன், அரண்மனையில் இருந்தவாறே எவ்வாறு தெரிவிக்க முடிந்தது?

ஆனால், அவர் தெரிவித்திருக்கிறார் என்றால், இணைய வசதி மூலமே அது சாத்தியமாகி இருக்கிறது; இணையதள வசதியும் செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் அப்போதே இருந்திருக்கின்றன” என்று கூறியுள்ளார்.

மேலும், “கம்யூட்டர் தொழில்நுட்பம் தமக்குச் சொந்தமானது என ஐரோப்பாவும் அமெரிக்காவும் உரிமை கோருகின்றன; ஆனால் உண்மையில் அது இந்தியாவுக்குச் சொந்தமானது. இணையமும் செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உண்டு” என்று ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>