உங்களை இழந்தது வீரர்களின் துரதிர்ஷ்டம்: வாசிம் ஜாபருக்கு ஆதரவாக அனில் கும்ப்ளே!

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க அணியின் பயிற்சியாளர் இருந்து வந்தார். வாசிம் ஜாபர் மீது உத்தராகண்ட் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் மஹிம் வர்மா பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

குறிப்பாக, உத்தராகண்ட் அணியில் வீரர்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக குற்றச்சாட்டியிருந்தார்.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் தனது பயிற்சியாளர் பதவியை வாசிம் ஜாபர் ராஜினாமா செய்தார். மேலும், தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தனக்கு மிகுந்த மன வேதனையையும், வலியையும் கொடுத்ததாக தெரிவித்த வாசிம் ஜாபர், தன் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் ஜாபருக்கு ஆதரவாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நான் உங்கள் பக்கம் வாசிம். நீங்கள் சரியானதை தான் செய்துள்ளீர்கள். உங்கள் வழிகாட்டுதலை இழந்தது அந்த வீரர்களின் துரதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார்.

More News >>