ஓட்டைப் பிரித்து உள்ளே வந்த குரங்கு... குழந்தையை கொன்று போட்ட கொடூரம்...!

தஞ்சாவூர் மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பெயிண்டிங் தொழிலாளியான இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த தம்பதியினருக்குத் தஞ்சை அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. பிறந்து 8 நாட்கள் ஆன குழந்தைகளுடன் வீட்டில் புவனா இருந்த நிலையில், இன்று பிற்பகல் புவனேஸ்வரி கழிவறைக்குச் சென்றிருந்தார். அப்போது, வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே வந்த சில குரங்குகள் இரட்டை குழந்தைகளைத் தூக்கிச் சென்றது. திடீரென குழந்தைகளின் அலறல் சத்தம் சத்தம் கேட்டு கழிவறையில் இருந்து வந்த புவனேஸ்வரி கூச்சல் போடவே குரங்குகள் ஒரு குழந்தையை மட்டும் போட்டுவிட்டு இன்னொரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டது, அந்த குழந்தையை வீட்டின் பின்னே உள்ள பெரிய கோட்டை அகழியில் தூக்கிப் போட்டு விட்டு குரங்குகள் ஓடிவிட்டன.

குழந்தையை வெகுநேரம் தேடிய உறவினர்கள், அகழியில் குழந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இந்தப் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதாகப் பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆதலால் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இப்போது ஒரு பச்சிளம் சிசுவின் உயிரைக் குடித்து இருக்கிறது என்று ஆதங்கப்பட்டார் அப்பகுதி மக்கள் ஆதலால் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இப்போது ஒரு பச்சிளம் சிசுவின் உயிரைக் குடித்து இருக்கிறது என்று ஆதங்கப்பட்டனர் அப்பகுதி மக்கள்.

More News >>