சட்டசபைத் தேர்தலில் சசிகலா போட்டி: சட்ட ரீதியில் முயற்சி செய்வதாக தினகரன் பேட்டி

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா நிச்சயம் போட்டியிடுவார் அதற்காக சில சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். தஞ்சாவூரில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுகவை மீட்டெடுப்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம் , சிவி.சண்முகம் பேசியது குறித்த கேள்விக்கு அண்ணா கூறியதையே நானும் கூறுகிறேன் ரோட்டில் குறைப்பது, இஞ்சி திண்பதற்கெல்லாம் பதில் கூற முடியாது.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவர் தமிழகத்திற்கு வருகை ஒன்றும் ஆச்சரியம் இல்லை. தப்பித்தவறி திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், நாங்கள் இதே ரோட்டில் இருப்போம், ஆனால் அதிமுகவினர் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்கே தெரியும் என்றும், சசிகலா தேர்தலில் போட்டியிடுவதற்காக சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து கொண்டுள்ளோம், அதில் வெற்றி பெற்றவுடன் அவர் நிச்சயம் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார்.

More News >>