பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்: ரம்யா நம்பீசன் ஓபன் டாக்

சினிமாவில் பட வாய்ப்புகள் கேட்டு வரும் பெண்களை படுக்கைக்கு அழைக்கப்படுகிறார்கள் என்று ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் பட வாய்ப்புக்காக தங்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி அதிரடி செயலில் ஈடுபட்டுள்ளார். தன்னுடன் உல்லாசமாக இருந்த பிரபல நடிகர்கள் குறித்து வெளிப்படையாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இவருக்கு பல முன்னணி நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ரம்யா நம்பீசன் கூறுகையில், “சினிமா உலகில் நடக்கும் மோசமான சம்பவங்கள் பற்றி என் சக நடிகைகள் கூறுவதை நான் மறுக்கவில்லை. அது உண்மை தான். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த தொல்லைக்கு நான் ஆளாகவில்லை. என் தோழிகள் இப்பிரச்னையை சந்தித்துள்ளது வெட்கமாக இருக்கிறது. பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. இதுபற்றி நடிகைகள் தைரியமாக பேச வேண்டும்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>