மாநிலம் விட்டு மாநிலம் பறக்கும் ராஷ்மிகா.. பாலிவுட்டில் சாதிப்பரா?

கன்னட நடிகை ரஷ்மிகா மந்தன்னா தனது வரவிருக்கும் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு, சித்தார்த் மல்ஹோத் ராவுடன் இணைந்து நடிக்கும் பாலிவுட் அறிமுக படமான 'மிஷன் மஜ்னு' படத்திற்காக மும்பையில் இருந்ததாக நடிகைக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் கூறுகிறது, ராஷ்மிகா விரைவில் தனது முதல் பான்-இந்தியா படமான 'புஷ்பா' படப்பிடிப்பில் விரைவில் தொடங்க உள்ளார். அதற்காக ஐதராப்த்து செல்கிறார். பிறகு மீண்டும் மிஷன் மஜ்னுக்காக லக்னோவுக்கு செல்கிறார்.

கன்னடம், தெலுங்கு படங்களில் அறிமுகாமி இருக்கும் ரஷ்மிகாவுக்குஏற்கனவே ரசிகர் பட்டாளம் நிறை இருக்கிறது. விரைவில் அவர் நடித்துள்ள சுல்தான் தமிழ் படம் வெளியாக உள்ளதுடன் இந்தியிலும் ஒரு ரவுண்டு வர காத்திருக்கிறார். கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் கலக்கிக்கொண்டிருப்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். சமீபத்தில் அவர் யுவன் சங்கர் ராஜா இசையில் நடித்த முதல் மியூசிக் வீடியோ 'டாப் டக்கர்' ஒரே இரவில் வெற்றி பெற்றது.

சமீபத்தில் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து ஐதராபாத் சென்றபோது ராஷ்மிகா ஒரு எளிய தோற்றத்தில் காணப்பட்டார். அணிந்தார். அவர் உயர் இடுப்பு ஜீன்ஸ் பேண்ட், ஒரு வெள்ளை ஷர்ட். கறுப்பு தொப்பி அணிந்திருந்தார்.ராஷ்மிகா இரண்டு பாலிவுட் படங்களில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது, மேலும் அல்லு அர்ஜூன் நடிக்கும் 'புஷ்பா' படம் மூலம் பான்-இந்தியா நட்சத்திரமாக மாற ஒரு படி மேலே உள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புஷ்பாவை சுகுமார் இயக்குகிறார். அல்லு அர்ஜுன் செம்மர கடத்தல் காரன் புஷ்பா ராஜ் என்ற வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஜகபதி பாபு, பிரகாஷ்ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர் மற்றும் அனுசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.ராஷ்மிகா கர்நாடகாவிலிருந்து பாலிவுட் செல்கிறார் ஏற்கனவே வெளிமாநில நட்சத்திரங்கள் பாலிவுட்டில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூறப்படும் நிலையில் ராஷ்மிகா சாதிப்பாரா என்பதை பொருந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News >>