தூத்துக்குடி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே வயல் வேலைக்கு நெல்லை மாவட்டம் திருமலைகொழுந்தபுரம் மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் 30க்கும் மேற்பட்டோர் ஒரே வாகனத்தில் சென்றுள்ளனர். அதிவேகத்தில் சென்ற அந்த லோடு ஆட்டோ மணியாச்சி அருகே ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தூத்துக்குடி மட்டும் நெல்லை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போதிய பஸ் வசதி இல்லாத இந்த பகுதியில் நோட் ஆட்டோக்களில் மக்கள் பயணம் செய்வது வாடிக்கையாக இருந்துவருகிறது விவசாயக் கூலி வேலைக்காக சென்றவர்களின் ஒரு சிறிய லோடு ஆட்டோவில் 30க்கும் மேற்பட்ட அவர்களை ஏற்றிச் சென்றது தான் அதி வேகத்தில் சென்றதால் ஆட்டோ நிலை குலைந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

More News >>