ஷூட்டிங் முடிந்து பாலிவுட்-கோலிவுட் சங்கமம்..

பான் இந்தியா படங்கள் கடந்த சில வருடங்களாக உருவாகி வருகின்றன. பிரபலமான ஒரு நடிகர் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மொழியிலும் பிரபலமானவர்கள் இணைந்து நடித்து அந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி வருகிறது. இந்தியில் அப்படியொரு படம் பிரம்மாஸ்த்ரா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகர் நாகர்ஜூனா, தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் முழுப்படப் பிடிப்பும் வெகு விரைவில் முடிவடைய உள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், இயக்குநர் அயன் முகர்ஜி ஆகியோருடன், எடுத்து கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே படத்தில் சங்கமாகும் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் நாகார்ஜூனா ஷூட்டிங் முடித்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து. வடக்கும் தெற்கும் ஒன்றாக சங்கமமானது போன்று அவர்களின் படங்கள் பிரபலமாகி வருகிறது. பிரமாண்டமான “பிரம்மாஸ்த்ரா” படத்தின் படப்பிடிப்பு, பொது முடக்க காலத்திற்கு பிறகு கடந்த வருட இறுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

அனைத்து வகையான முன்னெச்செரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், மிக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படப்பிடிப்பு மிக விரைவில் முடிவடையவுள்ள நிலையில் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. படத்தின் உலகளாவிய வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், நாகர்ஜூனா, மற்றும் மௌனி ராய் போன்ற பெரும் பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

More News >>