மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பள்ளி மாணவன்!

சென்னை அனகாபுத்தூரில் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 1ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் அனகாபுத்தூர், பெரியார் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனும் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.

ஒரே பள்ளியில் இருவரும் படித்து வந்ததால், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாணவியின் வீட்டில் அவரது பெற்றோர்கள் வெளியில் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து அடிக்கடி தொடர்ந்து அந்த மாணவியின் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அவளது வீட்டிற்கு சென்று பலமுறை உல்லாசமாக இருந்துள்ளான். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார். இதனால், அவளது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளது. ஆனால், மாணவி வெளியே இது குறித்து தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து 5 மாத கர்ப்பமாக மாணவி இருந்த விஷயம் அவரது தாயாருக்கு சமீபத்தில் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்று கருவை கலைத்து விட முடிவு செய்து சென்னை திருவல்லிகேணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் மாணவி மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அதில், மாணவன் காதலித்து கர்ப்பமாக்கிய விபரத்தை மாணவி தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். அதன்பேரில், அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவனை கைது செய்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>