ரைபிள் கிளப்பில் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்..
அஜீத்குமார் நடிக்கும் படம் வலிமை, எச்.வினோத் டைரக்டு செய்கிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நெட்டில் லக லக மெஸேஜ்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்கும் நிலையில் அங்கு வந்த ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடம் அப்டேட் கேட்டு அவர்களைத் திணறடித்தனர்.அண்மையில் ஒரு வைரல் வீடியோவில், முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியின் பிரச்சாரத்தின்போது வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் கூச்சலிடுவதைக் காண முடிந்தது.
இதையறிந்த அஜீத் ரசிகர்களுக்குச் செல்லமாகக் கண்டிப்பு தெரிவித்திருந்தார். பொது வெளியில் பண்பாக நடந்துகொள்ள வேண்டும் யாரையும் தர்மசங்கடத்திற்குள்ளாக்க கூடாது வலிமை பட அப்டேட் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.இந்நிலையில் சென்னையில் தனது ரசிகர்களுடன் அஜீத்தின் சமீபத்திய படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றது. வழக்கமான தோற்றத்திலிருந்து அஜித் புதிய தோற்றதில் காணப்பட்டார். பொது வெளியில் வருவதை அதிகம் தவிர்க்கும் அஜீத் வேப்பரியில் உள்ள போலீஸ் கமிஷனர்கள் அலுவலகத்தில் அமைந்துள்ள சென்னை ரைபிள் கிளப்பை வந்து பார்வையிட்டார்.
அஜீத் குமாரின் திடீர் வருகை ரைபிள் கிளப்பில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைவரையும் உற்சாகப்படுத்தியது. விரைவில், அஜித்தை கண்டதும் அங்கிருந்த ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டு சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்தனர், அவர் அவர்களுக்குப் பொறுமையாகப் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.சமீபத்தில் அஜித் தனது பைக்கர் நண்பர்களுடன் சாலைப் பயணம் மேற்கொண்டார். சாலைப் பயணத்தின் சில படங்கள் சமூக ஊடகங்களிலும் வெளிவந்தன. இந்த மறக்க முடியாத பயணத்தில் நடிகர் தனது குழுவுடன் சேர்ந்து 10,000 கி.மீ.பயணம் செய்து சாதனை படைத்தார்,அஜித் தற்போது தனது வரவிருக்கும் படமான வலிமை படத்தில் நடிக்கிறார்.
நேர்கொண்ட பார்வை, தீரன் ஆதிகாரம் ஒன்று படப் புகழ் எச் வினோத் இயக்குகிறார். இப்படம் கடந்த ஆண்டு வெளியிடப்படவிருந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவலால் படப்பிடிப்பு தாமதத்தை ஏற்படுத்தியது. இப்போது, படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து அப்டேட்க்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.வலிமை படத்தில் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியாக நடிப்பார் என்றும் அவரது கதாபாத்திரத்திற்கு ஈஸ்வரமூர்த்தி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும் அஜித் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார், போனி கபூர் தயாரிக்கிறார்.